மும்பை அந்தேரியை சேர்ந்த பிரபல ஓட்டலில் கடந்த ஆண்டு நிகிதா என்ற பெண், ஓட்டல் உரிமையாளரின் தனிப்பட்ட உதவியாளராக பணியில் சேர்ந்தார். அப்போது ஓட்டல் உரிமையாளரிடம் நெருங்கி பழகியதாக தெரிகிறது. கடந்த ஜனவரி மாதம் ஓட்டல் உரிமையாளரை தனது வீட்டில் விசேஷம் என நிகிதா அழைத்து இருந்தார். வீட்டுக்கு வந்த அவருக்கு நிகிதா டீ போட்டு கொடுத்தார். அந்த டீயை பருகியதும் உரிமையாளர் மயங்கினார்.
அப்போது நிகிதா, ஓட்டல் உரிமையாளரரை நிர்வாணமாக்கி, அவர் தன்னுடன் நெருக்கமாகவும், ஆபாசமாகவும் இருந்தது போன்று தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். மயக்கம் தெளிந்த அவரிடம் ஆபாச படத்தை காட்டி தனக்கு ரூ.15 கோடி தர வேண்டும் , அவ்வாறு பணம் தராவிட்டால் நீங்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார்.
இதனால் பயந்து போன ஓட்டல் அதிபர் முதல் தவணையாக ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து பணம் தருவதாக கூறினார். அதைபயன்படுத்தி்க்கொண்ட நிகிதா அடுத்த தவணையாக கோடிகளில் தான் பணம் வேண்டும். லட்சத்தில் பணம் வாங்க மாட்டேன் என்று அடம் பிடித்ததுடன் பணம் வராவிட்டால் இந்த வீடியோ வெளியாகிவிடும். அத்துடன் என்னை கட்டாயப்படுத்தி் பலாத்காரம் செய்ததாக போலீசிலும் புகார் செய்யப்போகிறேன் என்றார்.
இதனால் சுதாரித்துக்கொண்ட ஓட்டல் அதிபர் அம்போலி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோவை ஆய்வு செய்தனர். அப்போது இது நிகிதாவின் பணம் பறிப்பு நாடகம் என்பதை புரிந்து கொண்ட போலீசார் நிகிதாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தற்போது நிகிதாவை போலீசார் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கிறார்கள். இதுவரை நிகிதா இதுபோன்று எத்தனை பேரை ஏமாற்றினார் என விசாரித்து வருகிறார்கள்.