Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3வயது குழந்தை வன்கொடுமை- தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?.. கனிமொழி கேள்வி

DMK MP Kanimozhi speaking seriously during a press meet, addressing child safety and law and order concerns in Tamil Nadu in 2026.

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?” – 3 வயது குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கனிமொழி எம்பி எழுப்பியுள்ள ஆவேசக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் 3 வயது பெண் குழந்தை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா, இங்கு ஒரு அரசு செயல்படுகிறதா?” என மாநில அரசை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ள அவர், இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ்நாட்டில் அரசு என ஒன்று உள்ளதா?” கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
“பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ‘பொறுப்பு’ என்ற சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் ஆட்சியில் மக்களே பாதுகாப்பை உறுதி செய்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?”

பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வேதனைக்குரியது என்றும், குற்றவாளிகள் தப்பிவிடாதபடி சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!