Skip to content
Home » நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத் போர பண்டாவை சேர்ந்தவர் முகமது சவுகத் அலி. இவரது மகன் முகமது ஷோயப் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் முகமது ஷோயப் நள்ளிரவு ஒரு மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை முகமது ஷோயப் காதலித்து வந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு வேலையில் இருந்து வந்த முகமது ஷோயப் காதலியை ரகசியமாக சந்திக்க முடிவு செய்தார். முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு காதலி வீட்டில் 3-வது மாடிக்கு சென்றார். அங்கு வந்த காதலியுடன் சுவாரசியமாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இளம் பெண்ணின் பெற்றோர் திடீரென மாடிக்கு வந்தனர். இதனை கண்ட முகமது ஷோயப் இளம்பெண்ணின் பெற்றோரின் கண்ணில் படாமல் இருப்பதற்காக மறைவான பகுதிக்கு ஓடினார்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கால் தடுக்கி 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக முகமது ஷோயாப்பின் தந்தை முகமது சவுகத் அலிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அலறியடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த முகமது சவுகத் அலி மற்றும் அவரது உறவினர்கள் முகமது ஷோயப்பை மீட்டு சிகிச்சைக்காக உஸ்மானியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போர பண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!