விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், சட்டமன்ற காங்கிரஸ் கொறடாவாகவும் இருப்பவர் விஜயதாரணி. வழக்கறிஞர். தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் பாஜகவில் சேரப்போவதாக பேச்சு அடிபடுகிறது. கடந்த ஒருவாரமாக அவர் டில்லியில் முகாமிட்டு உள்ளார். இந்த நிலையில் இன்று அவர் பாஜக தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் சேரப்போகிறார் என்ற தகவல் பரவியது.
இது குறித்து டில்லியில் ஒரு தொலைக்காட்சி நிருபர் விஜயதாரணியை சந்தித்து, பாஜகவில் சேர இருக்கிறீர்களா, எப்போது சேருகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு விஜயதாரணி, நான் பாஜகவில் சேர வாய்ப்பு இல்லை. இதற்காக நான் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. வழக்கு விஷயமாக நான் உச்சநீதிமன்றம் வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.