கர்நாடகா முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று பேச வேண்டும் என்றும், அங்கு அவமரியாதை ஏற்படும் என அஞ்சக்கூடாது என்றும் கூறினார். மேலும், முதலமைச்சர் விஜய்க்கு அவமானம் ஏற்பட்டால் தமிழகமே வெகுண்டு எழும் என பிரேமலதா தெரிவித்தார்.
