Skip to content
Home » உபி கவர்னர் ஆனந்திபென் படேலுடன் ரஜினி சந்திப்பு..

உபி கவர்னர் ஆனந்திபென் படேலுடன் ரஜினி சந்திப்பு..

  • by Senthil

இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் நிலையில் அவர் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் ‘ஜெயிலர்’ படம் பார்க்க இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த், அங்கு தனது நண்பர்கள் மற்றும் சாமியார்களை சந்தித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

அதன் பின் ஜார்கண்ட் சென்ற ரஜினிகாந்த் அம்மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தார். இதையடுத்து தற்போது உத்தர பிரதேசம் வந்துள்ள ரஜினிகாந்த் உபி மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ’முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்து அதன் பின் அவருடன் ‘ஜெயிலர்’ படத்தை பார்க்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு காரணம் கடவுளின் அருள் தான்’ என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.  இதனை தொடர்ந்து உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். ரஜனியை உபி கவர்னர் உற்சாக வரவேற்பு அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!