சென்னை கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாணவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவனது பெற்றோர், அவனை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், தாழம்பூர் போலீசில் புகார் அளித்தனர்.
இகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல்போன மாணவனை பல இடங்களில் தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருந்தவருடன் மாணவனுக்கு தொடர்பு இருந்ததும், அந்த ஆசிரியை ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேலையை விட்டு நின்று கோயம்புத்தூர் சென்று விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த ஆசிரியையின் அலைபேசி எண்ணை வைத்து அவர் கோயம்புத்தூரில் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
பின்னர், கோயம்புத்தூர் போலீசாருடன் தொடர்புகொண்டு அந்த ஆசிரியை தங்கி இருந்த இடத்தை சோதனை செய்தபோது அவருடன் காணாமல் போன மாணவனும் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் இருவரையும் அழைத்து வந்து விசாரித்ததில், கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ஆசிரியை எப்சிபா (28). இவர், கடந்த 2018ல் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்வதும் தெரியவந்தது. மேலும், மதுராந்தகம் அருகே ஒரத்தி பகுதியில் வேலை செய்தவர் ராஜினாமா செய்து பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்துள்ளார்.