இந்தியா கூட்டணியில் இருந்த முக்கிய தலைவர் நிதிஷ்குமார். இவர் திடீரென அந்த கூட்டணியில் இருந்துரு வெளியேறி மீண்டும் பாஜகவுடன் சேர்ந்த பீகார் முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டார். திடீர் பல்டி அடித்து கூட்டணி மாறியது ஏன் என்பதற்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எந்த கட்சி எவ்வளவு சீட்களில் போட்டியிடும் என இதுவரை இந்தியா கூட்டணி முடிவு செய்யவில்லை. அந்த கூட்டணிக்கு வேறு பெயரை வைக்கக் கூறினேன். பெயரை மாற்றுவதற்கு நான் பலமுறை வலியுறுத்தினேன்; ஆனால் இந்தியா என்ற பெயரை முடிவு செய்தனர். இதுபோன்ற சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.