Skip to content
Home » பாடங்களில் இனி “இந்தியா” வுக்கு பதிலாக “பாரத்” என்ற வார்த்தையே இடம் பெறும்.

பாடங்களில் இனி “இந்தியா” வுக்கு பதிலாக “பாரத்” என்ற வார்த்தையே இடம் பெறும்.

12ம் வகுப்பு பாட புத்தகத்திலும் பாரத் னெ்ற இடம் பெறும் என்று அறிவிப்பு. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கீழ் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், என்சிஇஆர்டி-ன் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாடப் புத்தகங்களிலும் இனி “இந்தியா” என்ற வார்த்தைக்கு பதிலாக “பாரத்” என்ற வார்த்தையே இடம் பெறும் என்று என்சிஇஆர்டி-ன் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக “பாரத்” என்ற பெயரை சேர்க்க என்சிஇஆர்டி ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!