Skip to content
Home » இந்தியில் பேசிய நிதிஷ்… திமுகவை விமர்சனம் செய்ததால் பரபரப்பு…

இந்தியில் பேசிய நிதிஷ்… திமுகவை விமர்சனம் செய்ததால் பரபரப்பு…

  • by Senthil

டில்லியில் நேற்று முன்தினம் “இந்தியா” கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் “இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக உள்ளிட்ட 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.திமுக சார்பில் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு எம்பி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், அக்கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசத் தொடங்கினார். அப்போது டிஆர் பாலு, நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசுவதை மொழிபெயர்த்து சொல்லுமாறு கூறினார். இதையடுத்து மனோஜ் ஜா, நிதிஷ்குமாரின் இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொண்டிருந்தார். கூட்டத்தில்பேசிக்கொண்டிருந்த நிதிஷ்குமார் திடீரென கடும் கோபத்துடன், இந்தி இந்தியாவின் தேசிய மொழி. ஆகையால் திமுக தலைவர்கள் இந்தி மொழியை கற்க வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு போனபோதே அவர்களுடன் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்தும் போய்விட்டது என கோபத்துடன் கூறியதுடன் தனது இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததையும் உடனே நிறுத்துமாறு மனோஜ் ஜாவிற்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. நிதிஷ்குமாரின் இந்த செயல்பாடு கூட்டணி கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக திமுக தலைவர்களுக்கு பெரும் சங்கடத்தை கொடுத்தாக தெரிகிறது.  மேலும் இதற்கு முந்தைய “இந்தியா” கூட்டணியின் 3 கூட்டங்களிலும் நிதிஷ்குமாரின் இந்தி மொழி பேச்சை மனோஜ் ஜாதான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் அதன் அடிப்படையிலேயே இம்முறையும் டிஆர் பாலு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என கேட்ட தாகவும் நிதிஷ்குமாரின் இந்த செயல்பாடு திமுகவிற்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!