Skip to content
Home » ஐபிஎல்…..லக்னோ வெளியேற்றம்….மும்பை வீரர் ஆகாஷ் அபார பந்து வீச்சு

ஐபிஎல்…..லக்னோ வெளியேற்றம்….மும்பை வீரர் ஆகாஷ் அபார பந்து வீச்சு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றது. முதலில் ஆடிய மும்பை 182 ரன்கள் குவித்தது.

அதைத்தொடர்ந்து லக்னோ பேட்டிங் செய்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட ரன் அவுட் உள்ளிட்ட காரணங்களால் லக்னோ அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 101 ரன்களில் நடையை கட்டியது.  மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார். இதுகுறித்து ஆகாஷ் மத்வால் கூறியதாவது:- என்னுடைய இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன். நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். ஆனால் என்னுடைய விருப்பம் கிரிக்கெட்டாக இருந்தது. 2018ல் இருந்து என்னுடைய வாய்ப்பிற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன். வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவேன் என்று நம்புகிறேன். இன்ஜினியர்கள் விரைவாக கற்றுக்கொள்பவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!