Skip to content
Home » இங்கிலாந்து வீரர்களுக்கு ரூ.50 கோடி…. ஐபிஎல் உரிமையாளர்கள் பேரம்

இங்கிலாந்து வீரர்களுக்கு ரூ.50 கோடி…. ஐபிஎல் உரிமையாளர்கள் பேரம்

  • by Senthil

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ் லண்டன்’ பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் 6 இங்கிலாந்து வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் அணுகி உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கவுண்டி அணி நிர்வாகம் ஆகியவற்றை விடுத்து தங்களுடன் இணைந்து முழுமையாக பணியாற்றுவது தொடர்பாக வீரர்களுடன் தொடக்க நிலை பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

கால்பந்து விளையாட்டில் உள்ளது போலவே வீரர்கள் லீக் அணிகளுடன் ஆண்டு ஒப்பந்த முறையில் பணியாற்றுவது தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஆலோசித்து வரும் நிலையில் இது நிகழ்ந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி ஆண்டு முழுவதும் தங்களுடைய லீக் போட்டியில் விளையாடும்படி இங்கிலாந்தை சேர்ந்த 6 முன்னணி வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் சுமார் ரூ.50 கோடி வரை ஊதியமாக பேரம் பேசி உள்ளனர். ஐ.பி.எல். அணிகள் உரிமையாளர்கள் சமீபகாலமாக தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் என பல நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளின் அணிகளையும் வாங்கி உள்ளன. இங்கிலாந்து வீரர்களை போல ஆஸ்திரேலிய 20 ஓவர் வீரர்களையும் அணுகி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!