Skip to content
Home » வேண்டா வெறுப்பாக வாங்கிய ஷஷாங்க் சிங்….. பஞ்சாபுக்கு வெற்றி தேடிதந்தார்

வேண்டா வெறுப்பாக வாங்கிய ஷஷாங்க் சிங்….. பஞ்சாபுக்கு வெற்றி தேடிதந்தார்

ஐதராபாத்தில்  நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. அந்த அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர் முடிவில் 73ரன்கள்தான் எடுத்திருந்தது. இதனால் பஞ்சாப் அணி தோல்வியடைந்து விடும் என எல்லோரும் நினைத்தனர்.

அப்போது களமிறங்கிய ஷஷாங்க் சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுதினார். இவர் 23 பந்தில் அரைசதம் விளாசியதுடன் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். இவரது ஆட்டத்தால் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் இலக்கை எட்டி த்ரில் வெறற்றி பெற்றது. 61 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த சீசனில் மிகப்பெரிய சேஸிங் இதுவாகும்.

ஐபிஎல் ஏலத்தின்போது நாங்கள் இதே பெயரை கொண்ட மற்றொரு ஷஷாங்க் சிங்கை  ஏலம் எடுக்க இருந்தோம். ஆனால் இந்த ஷஷாங்க் சிங்கை அடிப்படை விலையான இருபது லட்ச ரூபாய்க்கு  தெரியாமல் எடுத்து விட்டோம்,  இவர் வேண்டாம் அவரை எடுத்துக்கொள்கிறோம் என பஞ்சாய் அணி உரிமையாளர்  ப்ரீத்தி ஜிந்தா   ஏலம் விடுபவர்களிடம் கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே இந்த ஷஷாங்க் சிங்  பஞ்சாப் அணியில் நீடித்தார்.

வேண்டா வெறுப்பாக வாங்கிய ஷஷாங்க் சிங் நேற்று  தனது திறமையை நிரூபித்தார். அவர் அடித்து  நொறுக்கி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.  ஆட்ட நாயகனாகவும் தேர்வு பெற்றார். இனி ஷஷாங்க் சிங் அணியில் முக்கிய இடம் பிடிப்பதுட உறுதி,   இனி அணி உரிமையாளர்கள் யாரையும் குறைவாக மதிப்பிட மாட்டார்கள் என்றும்  ரசிகர்கள் தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!