Skip to content
Home » இறையன்புக்கு…. இறையன்பு எழுதிய கடிதம்

இறையன்புக்கு…. இறையன்பு எழுதிய கடிதம்

  • by Senthil

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த இறையன்பு என்ற பெயர் கொண்ட ஆறாம் வகுப்பு மாணவன் தலைமைச்செயலாளர் இறையன்புவிற்கு  ஒரு கடிதம்  எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

வணக்கம் ஐயா, என் பெயர் இறையன்பு . நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்.

என் அம்மாவும், அப்பாவும் தங்கள் பெயரையே எனக்கு வைத்துள்ளனர். உங்களை போலவே நான் பிறரிடம் அன்பாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்கள்.

தயவுகூர்ந்து எங்கள் தெருவிற்க்கு சாலை வசதி செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

உடனடியாக அந்த சிறுவனை அழைத்து வர நடவடிக்கை எடுத்த தலைமை செயலாளர், சிறுவனின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என  உறு”தி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!