விஜய் தலைமையிலான தவெக அரசு, ஏய்த்துப் பிழைக்கும் தொழிலை கடந்த 4 மாதங்களாக கனகச்சிதமாக செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “போதிய அளவில் நெல் கொள்முதல் செய்யப்படாததால், மயிலாடுதுறையில் மழை, வெயிலில் சுமார் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ‘விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக நெல் கொள்முதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
