Skip to content
Home » ஸ்ரீபெரும்புதூரில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

ஸ்ரீபெரும்புதூரில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலங்களாக  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆவடி, சிப்காட் பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த சோதனையானது 2-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. ப்ளெக்ஸ் இந்தியா நிறுவனத்துக்குத் தொடர்புடைய இடங்களான சென்னை, ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!