Skip to content
Home » திருச்சி பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

திருச்சி பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

அமைச்சா் எ.வ. வேலுக்கு சொந்தமான  கல்லூரி, வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கடந்த 4 நாட்களாக வருமான வரி சோதனை நடந்தது. இந்த நிலையில் இன்று திருச்சி தென்னூர்  அண்ணாநகரில்   மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.  காலை 6 மணி முதல் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

தென்னூர் அண்ணாநகர் சாமிநாதன்  அமைச்சர் எ.வ. வேலுவுக்கு மிகவும் நெருக்கமானவர், பைனான்சியர்   என்றும்,  கூறப்படுகிறது. இவர் காபித்தூள்  விற்பனை செய்யும்  தொழிலும் செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!