Skip to content
Home » சபரிமலையில் ஆடி மாத பூஜை: வரும் 15ம் தேதி நடை திறப்பு

சபரிமலையில் ஆடி மாத பூஜை: வரும் 15ம் தேதி நடை திறப்பு

  • by Senthil

தமிழகத்தில் ஆடி 1, ஜூலை 17-ல் வருகிறது. ஆனால், கேரளாவில் ஜூலை 16ல் ஆடி 1 வருகிறது. இதனால், சபரிமலை நடை ஜூலை 15 மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஜூலை 16 அதிகாலை, 5:00க்கு நடை திறக்கப்பட்டதும் தந்திரி மகேஷ் மோகனரரு அய்யப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின், நெய்யபிஷேகத்தை துவக்கி வைப்பார். எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், மாலையில் தீபாராதனை இரவு அத்தாழ பூஜை, இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். காலை முதல் இரவு வரை நடைபெறும் உதயாஸ்தமன பூஜையும் உண்டு. ஜூலை 20 இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் போது, இந்த தேதி மாற்றத்தை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என, தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!