Skip to content
Home » நாம் தமிழர் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்……. திருவெறும்பூரில் ஆதரவு திரட்டினார்

நாம் தமிழர் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்……. திருவெறும்பூரில் ஆதரவு திரட்டினார்

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  ஜல்லிக்கட்டு ராஜேஷ்  இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில்  சூறாவளி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார்.  மைக் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றிபெற செய்யும்படி அவர் ஆதரவு திரட்டினார்.  கொளுத்தும் வெயிலில் அவர் திறந்த வாகனத்தில் வீதிவீதியாக சென்று  வாக்கு சேகரித்தார்.  கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அடங்கிய  பிரதிகளை  வீடு வீடாக சென்று கொடுத்த ராஜேஷ் தன்னை வெற்றிபெறச்செய்தால் திருச்சி மக்களின் முன்னேற்றத்திற்காக டில்லியில் குரல் கொடுப்பேன் என்று கூறி வாக்கு கேட்டார். அப்போது அவருக்கு பெண்கள்  வாழ்த்து தெரிவித்து மைக் சின்னத்திற்கே வாக்களிப்போம் என்றனர்.

வியாபாரிகள்,  தள்ளுவண்டிக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று ஜல்லிக்கட்டு ராஜேஷ் வாக்கு சேகரித்தார். அவருடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளாக சென்றனர்.   அவர் சென்ற இடங்களில் எல்லாம்  பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!