Skip to content
Home » ஜெய்பீம்’ படத்தின் நிஜ சம்பவத்தில் பாதித்தோருக்கு இழப்பீடு… அரசுக்கு கோர்ட் புது உத்தரவு..

ஜெய்பீம்’ படத்தின் நிஜ சம்பவத்தில் பாதித்தோருக்கு இழப்பீடு… அரசுக்கு கோர்ட் புது உத்தரவு..

  • by Senthil

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் மாவட்டம், கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவர் காவல் துறையினர் சித்ரவதையில் உயிரிழந்தார். இது தொடர்பாக ராஜகண்ணுவின் மனைவி பார்வதி தாக்கல் செய்த வழக்கில், உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், காவல் துறையினருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் காவல் துறையினர் சிலருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதேபோல, பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இடைக்கால இழப்பீடாக ராஜகண்ணு மனைவிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும், ராஜகண்ணுவின் சகோதரி ஆச்சிக்கு 50 ஆயிரம் ரூபாயும், ஆச்சியின் மகன் குள்ளனுக்கு 25 ஆயிரம் ரூபாயும், மற்றொரு மகன் குளஞ்சியப்பன் உள்பட ஐந்து பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், காவல் துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் உறவினர்களான தங்களுக்கு பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக் கோரி, ராஜகண்ணுவின் சகோதரி மகன் குளஞ்சியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

'ஜெய்பீம்’
‘ஜெய்பீம்’

அந்த மனுவில், ‘தனது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை மற்றும் நிவாரணங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரியுள்ளார்.

இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இறுதி இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும், சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை, அரசு வேலை வழங்குவது குறித்தும் நிலைபாட்டை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

ராஜகண்ணு மரணத்துக்கு நீதி கேட்டு அவரது மனைவி பார்வதி 1993-ல் நடத்திய சட்டப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு தான், நடிகர் சூர்யா நடிப்பில் ’ஜெய்பீம்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!