Skip to content
Home » ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயில் முன்பு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..

ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயில் முன்பு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு பக்தர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் மிகவும் பழமை வாய்ந்த கழுமலைநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் முன்பு யாக சாலைகள் நடைபெறும் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறையினர் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கு அரசு முயற்சி எடுத்து, இதற்கான அடித்தளம் அமைக்கும் பணிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு இன்று பணி தொடங்கப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி அனைத்து சமுதாய பக்தர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு திரண்டு,

பணிகள் நடைபெறும் அருகே அறவழியில் எதிர்ப்புகளை தெரிவித்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் முறைப்படி புகார் மனு அளித்தனர். இது குறித்து கோவில் பக்தர்கள் தெரிவிக்கையில்:- பழமை வாய்ந்த சிவன் கோவிலில் ஏற்கனவே இட நெருக்கடி உள்ளது. கோவில் திருக்குளம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது கோவில் முன்பு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் கட்டுவதற்கு அரசு மும்முரம் காட்டுகிறது. கோவிலுக்கு சொந்தமான இடங்கள் அதிக அளவில் உள்ளன. அதில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து கட்டுவதை விட்டுவிட்டு கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை நடைபெறும் இடத்தில் அலுவலகம் கட்டுவது என்பது பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே அலுவலகம் கட்டும் பணிகளை அரசு நிறுத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்துவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் காரணமாக ஜெயங்கொண்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!