ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையத்தின் (JPSC) 14-வது குடிமைப் பணித் தேர்வு முறைகேடு தொடர்பான புகாரில், ஆணையத்தின் முன்னாள் தலைவர் எல். கியாங்டே கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தலைமைச் செயலாளரான கியாங்டே, ஜூலை 22, 2026 அன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அம்மாநிலத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து கியாங்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
