Skip to content
Home » கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….

கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….

  • by Senthil

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் அரசு கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல், செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல், உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை கால்நடைகளுக்கு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் கால்நடைகளுக்கு வழங்கப்படும் உணவு முறை குறித்தும் அதனை பராமரிப்பு முறை குறித்தும் கண்காட்சி நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி

நிலையத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு தொழில் நுட்ப ஆலோசனைகளை கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வழங்கினர்.

கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் 394மாடுகள், 27 எருமை மாடுகள், 269 வெள்ளாடுகள், 145 செம்மறி ஆடு, 51 நாய்கள், 252 கோழிகள் என மொத்தம் 1,138 கால்நடைகளை விவசாயிகள் அழைத்து வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டனர் இந்நிகழ்ச்சி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது, ஊராட்சி மன்ற தலைவர், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குனர், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் என கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!