Skip to content
Home » கேலி செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணை.. மின்கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர்கள் ரவுடித்தனம்..

கேலி செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணை.. மின்கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர்கள் ரவுடித்தனம்..

குமரி மாவட்டம் மேல்புறம் வட்டவிளையை சேர்ந்த 35 வயது பெண், தனது கணவர் இறந்து விட்டதால் தாயாருடன் வசித்து வருகிறார். மேல்புறம் சந்திப்பு வழியாக அந்த பெண் செல்லும் போதெல்லாம் அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் கேலி-கிண்டல் செய்வது வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்று மதியம் மேல்புறம் சந்திப்பில் நடந்து சென்ற அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர்கள் கேலி-கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டுக்கு சென்று கம்பு மற்றும் வெட்டுக்கத்தியை எடுத்து வந்து ஆட்டோ டிரைவர்களிடம் காட்டி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர்கள் அந்த பெண்ணை அடித்து உடைத்தது அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். இதை அந்த பகுதி வழியாக சென்ற வாலிபர்கள் பார்த்தனர். அவர்கள் செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அருமனை போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அதை பார்த்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்ணை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆட்டோ டிரைவர்கள் மேல்புறத்தை சேர்ந்த சசி (47), வினோத் (44), பாகோடு பகுதியைச் சேர்ந்த திபின், விஜயகாந்த் (37) அரவிந்த் ஆகிய 5 பேர் மீதும் பெண்ணை தடுத்து நிறுத்தியது, தகாத வார்த்தை பேசியது, அவமானப்படுத்தியது மற்றும் மிரட்டியதாக 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!