Skip to content
Home » பிரதமர் மோடி குறித்த பேச்சு… மன்னிப்பு கேட்டார் கார்கே…

பிரதமர் மோடி குறித்த பேச்சு… மன்னிப்பு கேட்டார் கார்கே…

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகத்தின் ரோன் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, தவறு செய்யாதீர்கள். மோடி விஷம் நிறைந்த பாம்பு போன்றவர். நீங்கள் அப்படி இல்லை என்று கூறுவீர்களேயானால், தீண்டியபின் உங்களுக்கு அது உண்மை என்று தெரியும். அதனால், தீண்ட விடாதீர்கள். தீண்ட விட்டால் நீங்கள் இறந்து விடுவீர்கள். இல்லை அது விஷமல்ல என்று நம்பினால் நிரந்தரமாக தூங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார். கார்கேயின் இந்த பேச்சு இந்திய அளவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில், பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தாலோ மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தாலோ அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!