Skip to content
Home » கருக்கா வினோத்தை 5 நாள் காவில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல்

கருக்கா வினோத்தை 5 நாள் காவில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல்

  • by Senthil

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை காம்பவுண்ட் சுவர் அருகே 2 மாதங்களுக்கு முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக  பிரபல ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துள்ளது.  நேற்று  பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள்,  கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி  சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!