திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.56க்குட்பட்ட கருமண்டபத்தில் மாநகராட்சி கட்டுபாட்டில் இயங்கி வரும் நவீன தகன மையத்தில் மராமத்து பணிகள் நடைபெற இருப்பதால் வருகின்ற 20.10.2023 முதல் 3.11.2023 வரை 15 தினங்களுக்கு தகன மையம் செயல்படாது. இந்நாட்களில் தகனம் செய்வதற்கு அருகிலுள்ள குடமுருட்டி கோனக்கரை மற்றும் ஓயாமரி தகன மையத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.