கரூர் கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட பாஜக சார்பில் பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம், பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை முன்னிட்டு பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்களை டாட்டா ஏசி மற்றும் பேருந்து மூலம் அழைத்து வந்தனர் .இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு இரண்டு மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தருவதாக கூறி இருந்த நிலையில், இரண்டு மணி நேரம் கழித்து நான்கு மணி அளவில் வருகை தந்தார்.
வெயிலில் காத்திருந்த பொதுமக்களுக்கு உணவுகள் கூட ஏற்பாடு செய்யாததால் வயதான முதியவர்கள் பொதுமக்கள் செயல்வீரர்கள் கூட்டத்தில் இருந்து அனைவரும் எழுந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில், அண்ணாமலை பேசும்போது பின்பக்கத்தில் யாரும் இல்லாததால் காலியாக இருந்த இருக்கைகள், அதனை பொருட்படுத்தாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
கடும் வெயிலில் காத்திருந்த பொதுமக்கள் அண்ணாமலை வருகைக்கு தாமதமா ஆனதால் கோபமடைந்த அனைவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
அப்பொழுது டீ காபி ஐஸ்கிரீம் விற்கப்பட்டது அதனை வாங்கி சாப்பிட்டனர் பின்னர் கூட்டத்திற்கு பங்கேற்காமல் கிளம்பிச் சென்றனர்.