Skip to content
Home » கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு…

கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு…

கரூர் மாவட்டம், நன்னியூர் புதூர், மல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. ஆரம்பித்த சில மாதங்களில் நன்னியூர் புதூர் கிராமம் அருகில் செயல்பட்ட மணல் குவாரி மூடப்பட்டது. ஆனால், வாங்கலை அடுத்த மல்லம்பாளையம் கிராமம் அருகில் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. கடந்த மாதம் மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் கரூரில் செயல்பட்ட மல்லம்பாளையம் மணல் குவாரியும் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான லாரிகள் லாரிகள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மீண்டும் மணல் குவாரி செயல்படுவதற்கான ஏற்பாடுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மல்லம்பாளையம் மற்றும் நன்னியூரில் மணல்

குவாரிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையானது 6 மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் மல்லம்பாளையம்,காவிரி ஆற்றிற்கு 2 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்களின் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ட்ரோன் மூலம் மணல்கள் எவ்வளவு அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!