Skip to content
Home » கரூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

கரூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுயில் அமைந்துள்ள சபியா நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு
ஏர்டெல் 5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்க குழிகள் பறிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படவிருக்கும் செல்போன் டவர் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் செல்போன் டவர் அமைப்பதற்கான எவ்வித தகவலும் அனுமதியும் பெறாமல் பொதுமக்கள் ஒப்புதல் கேட்கப்படாமலும் செல்போன் டவர் அமைக்க பணி நடைபெற்று வருவதாகவும் செல்போன் டவர் அமைக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான கதிர்வீச்சினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்படும் எனவும் மிகுந்த மேலும் அச்சத்துடன் இருப்பதாக கூறி எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இந்நிலையில் இன்று பள்ளப்பட்டி பகுதியைச் சார்ந்த ஐந்து நபர்கள் 5g நெட்வொர்க் டவர் அமைக்க கூடாது என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!