Skip to content
Home » கரூரில் கலெக்டரிடம் தன் குழந்தையுடன் மாற்றுதிறனாளி பெண் கண்ணீருடன் மனு…

கரூரில் கலெக்டரிடம் தன் குழந்தையுடன் மாற்றுதிறனாளி பெண் கண்ணீருடன் மனு…

கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அடுத்த சுண்டுக்குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பானுமதி (35). ராமசாமி என்பவர் உடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 9 வயதில் மகன் உள்ளார். பானுமதி மாற்றுத்திறனாளி என்று தெரிந்து திருமணம் செய்து கொண்ட கணவர் ராமசாமி, மகன் 1 வயது குழந்தையாக இருக்கும்போது கைவிட்டுவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்வாதாரம் வேண்டி மனு அளித்தார். அந்த மனுவில் அரசு சார்பில் குடியிருக்க வீடு அல்லது

சுயதொழில் செய்வதற்கான பொருளாதார உதவி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக இருக்கும் பானுமதியை உடன் பிறந்தவர்களும் வீட்டை விட்டு வெளியேற்றியதால் தனது மகனையும், தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் வாழ்வாதாரம் வேண்டி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!