மறைந்த சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 65-ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து 50-க்கும் மேற்பட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். திமுக மாவட்ட, நகரம், ஒன்றியம், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
