Skip to content
Home » மக்களவை தேர்தல்…கரூரில் இஸ்லாமியர்களின் தொழுகை நேரம் மாற்றியமைப்பு….

மக்களவை தேர்தல்…கரூரில் இஸ்லாமியர்களின் தொழுகை நேரம் மாற்றியமைப்பு….

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி நகர பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு வசிக்கக்கூடிய இஸ்லாமியர்கள், இஸ்லாமிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் படி செயல்படுவது வழக்கம். அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி மட்டும் சுமார் 40 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளது.

2024 ஏப்ரல் 19 பாரளுமன்ற தேர்தலின் போது பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதற்காக அரவக்குறிச்சி பள்ளப்பட்டி ஜமாத் சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்புவழக்கமாக மதியம் 12 :45- மணிக்கு பாங்கு ஓசை எழுப்பப்பட்டு, மதியம் 1:30 மணிக்கு ஜூம் ஆ தொழுகை நடைபெறும். இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்காக தேர்தல் நடைபெறும் நாள் அன்று மட்டும் 12:30 மணிக்கு பங்கு ஓசை எழுப்பப்பட்டு, 12 :40 மணிக்கு ஜூம் ஆ தொழுகை நடைபெறும் என ஜமாத்தார் சார்பில், அறிவிப்பு வெளியீடு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!