Skip to content
Home » கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

  • by Senthil

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஜல் ஜீவன் மத்திய அரசின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 3 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் மற்றும் 3728 கிராமங்கள் குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான திட்டம் ரூபாய் 4187.84 கோடி மதிப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 14.12.2022 ஆம் தேதி அன்று ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் தற்பொழுது கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நடைபெற்ற இடத்தில் நடைபெற்று வரும் இடத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பணிகள் நடைபெறுவதால் வேலாயுதம்பாளையம், புஞ்சை புகலூர்,காகிதபுரம், திருக்காடுதுறை, பாலதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்கு குடிநீர் பிரச்சனை ஏற்படுகிறது அதேபோல் ஆழ்துளை கிணறுகளிலும் நீர் வற்றி இதன் காரணமாக

இந்த ஜல்ஜீவன் திட்டத்தை எங்கள் பகுதியில் தடை செய்ய வேண்டும். மேலும் ஏற்கனவே காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காயித ஆலை நிறுவனத்தால் ஏற்கனவே மூன்று பிளான்ட் கள் அமைக்கப்பட்டு குடிநீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த ஜல்ஜீவன் கூட்டுக் குடிநீர் திட்டமும் அமைக்கப்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படும்.

தவிட்டுப்பாளையத்தைச் சார்ந்த 12 சமூக ஆர்வலர்கள் இது தொடர்பாக எந்த பிரச்சனையும் எழுப்பக் கூடாது எனவும் எதிர்காலத்தில் பொது அமைதியை சீர்குளிக்கும் செயலை செய்யக்கூடாது என்பதற்காக 12 நபர்களுக்கும் ஒரு வருட காலத்திற்கு அமைதி காப்பீர் என்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்படும் ஒரு வருடத்திற்கு சிறையில் வைக்க நேரிடும் என வட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் வட்டாட்சியர் புகலூர் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது அந்த 12 நபர்களுக்கும் இதற்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக ஜல்ஜீவன் திட்டம் பணிகள் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று கலெக்டர் பொதுமக்களை சந்தித்து இது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் பாதுகாப்பு பணிக்காக வேலாயும்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!