Skip to content
Home » கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

  • by Senthil

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாக இன்று ஆலய கொடிமரத்தில் கொடியேற்ற விழா சிறப்பாக தொடங்கியது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை ஆலய நடை திறக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக விநாயகர் ,வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி மற்றும் ஸ்ரீ அலங்கார வள்ளி , ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ பசுபதீஸ்வரர்

உள்ளிட்ட பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்து பின்னர் ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் பிரத்தியேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர்.

அதைத் தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தை ஆலய கொடிமரம் தில் சிறப்பு அபிஷேகம் நடத்தி அதன் தொடர்ச்சியாக கொடி மரத்திற்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, சந்தன பொட்டிட்டு, மேள தாளங்கள் முழங்க கொடியேற்ற விழா சிறப்பாக தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக கொடி மரத்திற்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்தரத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற விழா நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!