Skip to content
Home » கரூர் அருகே குட்காவை விற்க எடுத்து சென்ற 4 பேர் கைது… பணம்-கார் பறிமுதல்..

கரூர் அருகே குட்காவை விற்க எடுத்து சென்ற 4 பேர் கைது… பணம்-கார் பறிமுதல்..

கரூர் மாவட்டம், மாயனூர் காவல்நிலைய போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி மாயனூர் அன்பு நகர் அருகில் சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த TN 01 AH 2702 மாருதி காரை நிறுத்தி சோதனை செய்த போது அந்த காரில் பணம் ரூபாய். 2,95,000/- மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன,

காரில் இருந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (20), விக்னேஷ்வரன், அரவிந்த் ஆகிய 3 நபர்களை கைது செய்து கிடுக்கு பிடி விசாரணை செய்ததில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி, கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலிருந்து அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் வாங்கி வந்து திருவாரூர் மாவட்டம்,

மான்னார்குடியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை சில்லறை விற்பனை செய்யும் காஜா மொய்தீன் என்பவருக்கு கொடுத்துவிட்டு பணம் ரூ2,95,000 பெற்றுகொண்டு மீதமுள்ள குட்கா பொருட்களுடன் திரும்பி வந்ததாகவும் கூறியுள்ளனர்.

கொடுத்த தகவலின் பேரில் மான்னார்குடியில் கடை வைத்திருக்கும் காஜா மொய்தீன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 13 சாக்கு மூட்டைகளில் இருந்த 124 கிலோ எடையுள்ள அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களையும், குட்கா பொருட்களை எடுத்துச்செல்வதற்கு பயன்படுத்திய கார் மற்றும் மேற்படி பணம் ரூபாய். 2,95,000/- யையும் பறிமுதல் செய்யப்பட்டு 4 நபர்கள் மீது மாயனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு
நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!