Skip to content
Home » கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை….

கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை….

  • by Senthil

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் என இரண்டு இடங்களில் மணல் குவாரி செயல்பட்டது அந்த  குவாரியின் அலுவலகம் நாமக்கல் மாவட்டம்  மோகனூரில் செயல்பட்டது.  மேற்கண்ட 3 இடங்களிலும் கடந்த மாதம் 12ம் தேதி   அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த அலுவலகத்தில் கரூர் மாவட்டத்தில் செயல்பட்ட  இரண்டு குவாரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்ட  1 மணல் குவாரி என மூன்று குவாரிகளின் ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற

சோதனையில் முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது வரை மணல் குவாரி இயங்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில்  இன்று கரூர் மாவட்டம்  நம்பியூர் பகுதியில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை  செய்து  வருகின்றனர். போலி ஆவணங்கள் வைத்து மணல் அள்ளப்பட்டு அரசுக்கு இழப்பீடு செய்யப்பட்டதாக கூறி விசாரணை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினரும் வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!