Skip to content
Home » கரூரில் மராத்தான் போட்டியில் 250 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

கரூரில் மராத்தான் போட்டியில் 250 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தேசிய/மாநில/மாவட்ட அளவில் “இளைஞர் திருவிழா 2023-24′” மூலம் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு மாரத்தான் ஒட்டம் , நடத்தப்படு வருகிறது. இதனையொட்டி, கரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே மாரத்தான்

போட்டி இன்று நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மராத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியானது 5 கிமீ தொலைவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி காளியப்பனூர், தாந்தோன்றிமலை, பாரதிதாசன் நகர் வழியாக சென்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பாராட்டு தெரிவித்து, சான்றிதழ்களை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!