Skip to content
Home » கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு…

கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு…

கரூர் மாவட்டம், புகளூர் கச்சியப்பன் காலனி பகுதியை சேர்ந்தவர் சோலை ராஜ். இவரது மனைவி மஞ்சுளா (63).இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள பாசன கிணற்றின் அருகே உள்ள பூக்களை பறிப்பதற்காக கிணற்றின் அருகே சென்று பூக்களை பறித்துக் கொண்டிருந்தார் .அப்போது நிலை தடுமாறி கிணற்று தண்ணீருக்குள் விழுந்து விட்டார் . பூக்களை பறிக்க போன மஞ்சுளா வெகுநேரமாக வீடு திரும்பாதால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்று பகுதிக்கு சென்று பார்த்த போது மஞ்சுளா நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து இருப்பது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலை அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் மூழ்கி இறந்த மஞ்சுளாவை நீண்ட நேரம் தேடி பின்னர் சடலமாக மீட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!