கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அண்ணா நகரில் குதுபுதியன் தர்கா வளாகத்தில் இஸ்லாமியர்கள் சார்பில் பள்ளப்பட்டி வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வாட்டர் பாட்டில், ஜூஸ், பிஸ்கட் வழங்கப்பட்டது. மேலும், செல்போன் சார்ஜ் செய்வதற்காக பிளக் பாயிண்ட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் நடந்து செல்வதால் அவர்களுக்கு கால் வலிக்கு மருந்துகளையும் வழங்கினர். மேலும்,
மினரல் வாட்டர், குளிர்ந்த பானை நீர், இளைப்பார சாமியானா பந்தல் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் நடத்தும் இந்த நிகழ்வால் மாற்று மத சகோதரர்களிடையே நல்ல வரவேற்பையும், மத நல்லிணக்கத்தையும் பெற்று வருகிறது.