Skip to content
Home » கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்- ஆராதனை….

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்- ஆராதனை….

ஆண்டிற்கு ஒரு முறை ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் சங்கடஹரா சதுர்த்தி விழா மிகவும் பிரதிஷ்டை பெற்றதாகும். இந்நிலையில் கரூர் நகரப் பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத சதுர்த்தி விழாவை முன்னிட்டு இரவு சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் கற்பக விநாயகருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அணிவித்து அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் மூலவர் கணபதிக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மகா சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!