Skip to content
Home » கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி கரூர் வெங்கமேடு குளத்துபாளையத்தில் நடைபெற்றது.

பள்ளி மாணவர்கள் கலத்து கொண்ட விழிப்புணர்வு பேரணியில் 2027 க்குள் இந்தியாவில் கல்வி கற்காதோர் எவரும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும், 15 வயதுக்கு மேற்பட்ட‌ அனைவரும் முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோர்க்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்குவது. கல்வியுடன் கூடிய,

வாழ்க்தைத்திறன் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்குதல். டிஜிட்டல் கல்வி மற்றும் வணிகத் திறன்களை அனைவருக்கும் அளித்தல், வாக்காளர் உரி மை, சுற்றுச்சூழல் அறிவு, உடல்நலம் சாரந்த கல்வியை வழங்குதல் குறித்த புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் உள்ள பலன்கள் குறித்து பேரணியில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!