Skip to content
Home » கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயத்தில் ஒன்றான கரூர் மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு இன்று ஆலய கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, விநாயகர் மற்றும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து, சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து.

பின்னர் கொடிமரம் அருகே ஆலயத்தின் சிவாச்சாரியார் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து யாக வேள்வி நடத்தினார். அதை தொடர்ந்து யாகத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பிறகு கொடி மரத்திற்கு புனித

தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை அலங்காரவல்லி சௌந்தரநாயகி கல்யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட உற்சவ சுவாமிகள் கொடிமரத்தில் அருகே கொழுவிற்க செய்தனர். மேல தாளங்கள் முழங்க ஆலயத்தின் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஓதியபடி கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னர் கொடிமரத்திற்கு வண்ண மாலைகல் அனுவித்து சந்தன பொட்டிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார்.

அதைத்தொடர்ந்து உற்சவர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கும் தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டினார். பின்னர் கூடி இருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!