Skip to content
Home » கரூர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்….

கரூர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளியில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று அப்பகுதி பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு எடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை தண்ணீர் பள்ளி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனிதநீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, நாடி சந்தனம், லட்ச்சார்ச்சனை, த்ரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்ட இரண்டு கால யாகவேள்வி பூஜைகளை செய்தனர்.

இன்று காலை 2ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குட முழுக்கு செய்தனர். அதனை தொடர்ந்து அரச மரத்தடியில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட வரசித்தி விநாயகருக்கும் புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் தண்ணீர்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!