Skip to content
Home » கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத சோமவார பிரதோஷ விழா..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத சோமவார பிரதோஷ விழா..

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் , நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் விபூதி பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .

அதை தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு வெள்ளி கவசம் அணிவித்த பிறகு பக்தர்கள் வழங்கிய வண்ண

பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத சோமவார பிரதோஷ விழா நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!