Skip to content
Home » கரூரில் போலி முகவரியை காட்டி பாஸ்போர்ட்…இலங்கை தமிழர் கைது…

கரூரில் போலி முகவரியை காட்டி பாஸ்போர்ட்…இலங்கை தமிழர் கைது…

  • by Senthil

கரூர், ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் தயானந்தன் (வயது 36). இவர் தாந்தோணிமலை வாஞ்சிநாதன் நகரில் குடியிருப்பதாக கூறி, போலியான முகவரியை காட்டி பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தயானந்தன் தான் ஒரு இலங்கை தமிழர் என்பதை மறைத்து, போலியான முகவரியை காட்டி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து தாந்தோணிமலை போலீசார் தயானந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!