Skip to content
Home » பொய் வழக்கு உடைபடும்….. செந்தில் பாலாஜியை திமுக கைவிடாது…. கரூரில் உதயநிதி பேச்சு

பொய் வழக்கு உடைபடும்….. செந்தில் பாலாஜியை திமுக கைவிடாது…. கரூரில் உதயநிதி பேச்சு

  • by Senthil

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார்.  அப்போது அவர் பேசியதாவது:

ஜோதிமணி அக்காவுக்கு கை சின்னத்தில் வாக்களிங்கள்.ஓட்டு பேலட்டில் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 4 வது சின்னமாக இருக்கும்  கை  சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

ஜோதிமணியை எதிர்த்து எந்த எதிர்கட்சி கொம்பன் நின்றாலும் அவர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்.2016 ல் 450 ரூபாய் இருந்த சிலிண்டர்.தற்போது 1100  ரூபாய் விற்கிறது. ஏமாற்றுவதற்காக 100 ரூபாய் குறைத்துள்ளார்கள். மீண்டும் அவர்கள் வெற்றி பெற்றால்  ஒரே நாளில் 500 ரூபாய் கூட உயர்த்துவார்கள், ஏமாந்து விடாதீர்கள்.
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குளறுபடி இருக்கத்தான் செய்யும். இது மிகப்பெரிய திட்டம். ஒரு கோடி 60 லட்சம் பேர் பதிவு செய்த நிலையில், ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதி நபர்களுக்கு பரிசீலனை செய்து ஆறு மாதம் கழித்து மீண்டும் பரிசீலனை செய்து உரியவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்.

மோடி அடிக்கடி தமிழகம் வந்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். இங்கேயே வீடு எடுத்து தங்கினாலும் அவரது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஒருவர் கூட டெபாசிட் வாங்க முடியாது.

இங்கேயே வீடு எடுத்து தங்கினாலும் அவரது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஒருவர் கூட டெபாசிட் வாங்க முடியாது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டு சிறையில் வைத்துள்ளார்கள். அமைச்சர் செந்தில்பாலாஜியை தலைவரும், , திமுகவும் கைவிடாது.

பொய் வழக்கை உடைத்து அவரை வெளியே கொண்டு வந்து ஜோதிமணி, ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றி  விழா நடத்துவோம்.  அண்ணன் செந்தில்பாலாஜி தலைமையில் வெற்றி கொண்டாட்டத்தை நடத்திக் காட்டுவோம்  எனவே அனைவரும்  கை சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!