Skip to content
Home » கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் பால்குடம்-கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திகடன்…

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் பால்குடம்-கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திகடன்…

சித்திரை மாதத்தில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று அமராவதி ஆற்றில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள் சீருடை அணிந்தவாறு

 

பால்குடம், தீர்த்த குடம், கரும்புத் தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக் கடனை செய்து வேம்பு மாரியம்மன் மணமுழுகி வழிபட்டனர்.

நிகழ்ச்சியை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து தாரை தப்பட்டைகள் முழங்க பால் குடத் திரு வீதி உலா ஜகவர் பஜார், மாரியம்மன் கோவில் தெரு, பேருந்து நிலையம், தின்னப்பா கார்னர், ரத்தனம் சாலை உள்ளிட்ட வழியாக வலம் வந்து பிறகு ஆலயம் வந்தடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!