Skip to content
Home » காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது….

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது….

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள், பயங்கரவாதிகளை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைதான 2 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள், மற்றும் வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சதி திட்டத்திற்காக பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றார்களா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!