Skip to content
Home » திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….

  • by Senthil

திருச்சி, பீமநகர் நியூராஜா காலனியை சேர்ந்தவர் சுந்தரேசன் (54). இவர்  கோரையாறு பாலம் பகுதியில் நின்றுள்ளார். அப்போது திடீரென தாராநால்லூரை சேர்ந்த திவாகர் (21) , கிரண்குமார் (22) ஆகிய 2 பேரும் சுந்தரேசனிடம் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.  மேலும் சுந்தரேசன் கையில் இருந்த 600 ரூபாயை பறித்து கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் சோமரசம்பேட்டை ஜான்செல்வராஜ் (23) என்பவரது டூவீலரையும் திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் கத்தி முனையில் மிரட்டி பணம்  பறித்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!